திருநெல்வேலி, மே 15- நெல்லை அருகே கோவி லுக்கு வந்த போது கார் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் அருகே உள்ள அரியக்காம் பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது35).இவர் தனது உறவினரான சுப்பு (50) மற் றும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவி லுக்கு சுவாமி தரிசனம் செய்வ தற்காக காரில் சனிக்கிழமை இரவு புறப்பட்டு வந்தார். காரை சத்தியமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (30) என்பவர் ஓட்டி வந்தார். ஞாயிற்றுக்கிழமை அதி காலை நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள பாப்பாங்குளம் விலக்கு அருகே வந்த போது சிறுநீர் கழிப்பதற்காக சாலையோ ரத்தில் காரை நிறுத்தி உள்ள னர். டிரைவர் முருகேசனும், மற்றொருவரும் காரில் இருந்து இறங்கி காட்டு பகு திக்குள் சென்றுள்ளனர். லோகநாதன் காரின் பின்புற இருக்கையிலும், சுப்பு டிரை வர் அருகே உள்ள இருக்கை யிலும் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பின்னால் நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த மினி லோடு ஆட்டோ எதிர் பாராத விதமாக சாலையோ ரம் நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் லோகநாதன் இடி பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சுப்புவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தாழை யூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயம் அடைந்த சுப்பு வை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்த னர். உயிரிழந்த லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மினி லோடு ஆட்டோ டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் முக் காணியைச் சேர்ந்த முத்து மாலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.