சிவகாசியில் மூத்த தோழரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான என்.கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழா ஞாயிறன்று நடைபெற்றது, மணமக்கள் ஜி.நிவேதா-எம்,கௌதம் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள், செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன்,மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ,குருசாமி. நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் பி,பாலசுப்பிரமணியன். மூத்த தலைவர் ஜே.லாசர், ஓய்வு பெற்ற ஆசிரியர் வைத்தியநாதன், மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மணமக்களின் பெற்றோர் கெங்காதரன்-பிரேமலதா, முருகன்-சுபாலட்சுமி ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.