உரிய நடவடிக்கை எடுத்திடுக!
விவசாயத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ஜெ.காசி, மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், ஆகி யோர் செய்திக் குறிப்பு வருமாறு: 100வேலைக்கு பணி தள பொறுப்பாளராக ஆட்சி யரே நியமித்த நாகலட்சுமி என்ற பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு குழந்தைகளுக்கு உரிய நிவா ரணம் அளிக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கல்வி கற்க உரிய ஏற்பாடுகளை தமி ழக முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகி யோர் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ஜெ.காசி, மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், ஆகி யோர் செய்திக் குறிப்பு வருமாறு: 100வேலைக்கு பணி தள பொறுப்பாளராக ஆட்சி யரே நியமித்த நாகலட்சுமி என்ற பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு குழந்தைகளுக்கு உரிய நிவா ரணம் அளிக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கல்வி கற்க உரிய ஏற்பாடுகளை தமி ழக முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகி யோர் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தான் அரசுப்பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது சிவ ரக்கோட்டை பகுதி வழியாக அரசு பேருந்து வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளை அருகில் பயணம் செய்த சக பயணி களிடம் குழந்தைகளை கொடுத்து விட்டு, கடிதம் ஒன்றையும் கொடுத்துவிட்டு திடீரென பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பேருந்தில் இருந்து குதித்ததால் ஓட்டுநர் உடனடி யாக பேருந்தை நிறுத்தி காவல்துறையினருக்கு தக வல் தெரிவித்தார். தகவலறிந்த கள்ளிக்குடி காவல்துறையினர் தனி யார் ஆம்புலன்ஸ் மூலம் திரு மங்கலம் அரசு மருத்துவ மனைக்கு நாகலெட்சுமியை அனுப்பி வைத்தனர். தொட ர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் மருத்து வர்கள் சிகிச்சை அளித்தனர். இதனைத்தொடர்ந்து நாக லெட்சுமி சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.
மேலும் காவல்துறை விசாரணையில் நாகலட்சுமி யின் கடிதத்தை கைப்பற்றி னர். அக்கடிதத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய ஆட்சியர் பணி வழங்கியதாகவும் அந்த வேலையை தனக்கு வழங்க மாட்டேன் என்று மையிட் டான்பட்டி வார்டு உறுப்பி னர்கள் வீரகுமார், பாலமுரு கன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் தவறாக பேசி மனதை காயப்படுத்தியதாக வும் அதற்காக தான் கள்ளிக் குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், புகார் அளித்ததற்கு ஏன் புகார் அளிக்கிறாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலை முயற் சிக்கு என்னை ஆளக்கிய தாகவும்? தனக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள் ளது. அதனால் வேலை கேட்டது தவறா! என்றும் கடி தத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது தற்கொலை முயற்சிக்கு முக்கிய கார ணம் மையிட்டான்பட்டி கிளார்க் முத்து வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப் படுத்தியது தான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 100 நாள் வேலை திட்டத் தில் முறைகேடுகள் நடப்ப தாகவும், தொடக்கத்தில் இருந்தே நாகலெட்சுமியை பணி செய்ய விடாமல் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளர்க் ஆகியோர் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கணவர் கணேசன் புகார் அளித்தார். மாவட்ட ஆட்சியர் கடிதம் கொடுத்து பணிக்கு சேர்ந்த பெண்ணையே வேலை பார்க்க விடாமல் செய்த தோடு, தற்கொலை செய்ய வைத்து 5 பெண் குழந்தை களை அனாதையாக்கி விட் டதாக தெரிவித்தார்.