சின்னாளப்பட்டி,மே 3- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய கூட்டம் செம்பட்டியில் யூனியன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹேமலதா மணிகண்டன் முன்னிலை வகித்தார் .ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினார். ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி பேசுகையில், ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானமாக ஏற்று நிறைவேற்றப்படும் என்றார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் நன்றி கூறினார். மேலாளர் முருகன் உட்பட பல துறைஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.