சென்னை, பிப். 15- துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பயணியிடம் இருந்த எலக்டிரிக் ரைஸ் குக்கரை திறந்து பார்த்த போது, அதில் 300கிராம் தங்கக் கட்டி மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க அதிகாரி கள் தங்கத்தை பறிமுதல் செய்த துடன், அந்த பயணியை கைது செய்தனர். அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த ஒரு விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, உள்ளாடைக்குள் 290 கிராம் தங்க பசையை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம் அருகே இருந்த 2 குப்பைத் தொட்டி களை விமான நிலைய தூய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தினர். அப்போது குப்பை தொட்டிக ளுக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த 2 பார்சல்களை தூய்மை பணியாளர்கள் எடுத்து சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த பார்சல் களை பிரித்துப் பார்த்தபோது அதற்குள் 960 கிராம் தங்க பசை இருப்பது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.42.8 லட்ச ரூபாயாகும். இதையடுத்து கடத்தல் தங்கத்தை விமான நிலைய குப்பை தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு தப்பி ஓடிய கடத்தல் ஆசாமிகளை சிசிடிவி காட்சி கள் மூலம் சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர். சோதனையில் சிக்கிய தங்கத்தின் மதிப்பு 70 லட்சமாகும்.