districts

சிறந்த வணிக சூழலை ஏற்படுத்த தொழில்முனைவோருக்கு உதவி

சென்னை, ஜன.25-  வாத்வானி அறக்கட்டளை மற்றும் தேசிய தொழில்முனைவோர் கூட்டமைப்பு இணைந்துஇன்று வாத்வானி டேக் ஆஃப் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள் ்ளன. இந்த திட்டமானது, தேர்ந்தெடுக்கப் ்பட்ட தொழில்முனைவோருக்கு  வலைப் ்பின்னல் அமைப்பு , வணிகத் தலைவர்கள்மற்றும் தொழில்முனைவோர்களின் வழி காட்டுதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு யோசனைகளை அளிப்பதன் மூலம் தொழில்முனைவோருக்கான சிறந்த வணிக சூழலை ஏற்படுத்தி தருகிறது.   இது குறித்து பேசிய வாத்வானி அறக்கட்டளையின் தலைமைஇயக்க அதிகாரி சஞ்சய் ஷா, சிலிக்கான் பள்ளத் ்தாக்கில் உள்ள மிகச் சிறந்த தொழில் முனைவோர், வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து செய லாற்றும் வாய்ப்பையும் ஊக்குவிப் ்பையும் இந்த திட்டம்  வழங்கும் என்றார். இதனால் மேலும்பலரை தொழில் முனைவோராக மாற்ற முயற்சிப் ்பதாகவும் அவர் தெரிவித்தார்.