திண்டுக்கல், ஜூலை 18- குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயி ரம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி மற்றும் ஈ.எஸ்.ஐ திட் டத்தில் ஆஷா ஊழியர்களை இணைக்க வேண்டும். பணிக் கொடை வழங்க வேண்டும். இறப்பு நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகில் கருப்புப் பட்டை அணிந்து ஆஷா ஊழியர்கள். போராட்டம் நடத்தினர். இதில், மாநிலத் தலைவர் டெய்சி, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜானகி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பேரா. சோ.மோகனா, மாவட்டத் தலைவர் கே.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.