மதுரை,அக்.22- தென்காசி மாவட்டம், அரியநாயகிபுரம் இந்து நாடார் பள்ளியில் நிலவும் சாதிய தீண்டாமை வன்கொடுமையைக் கண் டித்தும், அருந்ததியர் மாணவர் சீனுவின் மரணத்துக்கு காரணமான ஆசிரியர்கள் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் வன் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் விடு தலை வீரன் தலைமை வகித்தார். மதுரை மாவட்டத்தலைவர் பழபாண்டியன், மாநில மாணவரணி செயலாளர் பீமாராவ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், மக்கள் தேசம் கட்சி மாநில செயலாளர் குருவிஜயன் ஆகியோர் பேசி னர். தலித் விடுதலை இயக்கத்தின் தலை வர் ச.கருப்பையா நிறைவுரையாற்றினார். மதுரை மாவட்ட செயலாளர் மின்னல் வர தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.