districts

தொழில் நுட்பச்சூழலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்காற்றும்

புதுதில்லி,ஜூன் 9- இந்தியாவில் தொழில்நுட்பச்சூழலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நு ட்பத்தில் மிக முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை செயல் அதி காரியான சாம் ஆல்ட்மேன், பிரதமர் நரேந்திர  மோடியை ஜூன் 9 அன்று சந்தித்தார்.  சாட்ஜி பிடி எனும் செயலியை உருவாக்கிய இந்நிறு வனம், ஜிபிடி-4, டால்-இ, ஓபன்ஏஐ-5, ஓபன் ஏஐ கோடெக்ஸ் போன்ற தொழில்நுட்பங் களையும் உருவாக்கியுள்ளது.  இந்த சந்திப்பு குறித்து சாம் ஆல்ட்மேன் தனது டிவிட்டரில்,  “இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பம் மூலம் இந்தியா எவ்வாறு பயனடைந்து வருகிறது என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட உரையாடல் மிகச்சிறப்பாக இருந்தது. பிரதமர் அலுவலக அதிகாரிகளு டனான ஒவ்வொரு சந்திப்பும் மகிழ்ச்சிகர மானதாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார். சாம் ஆல்ட்மேனின் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, “ஆழமான உரையாடலுக்காக உங்களுக்கு நன்றி. இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில். எங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, தொழில்நுட்ப மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.