திருநெல்வேலி,நவ.30- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு சரக்கு ரயில் மூலம் 2500 மெட்ரிக் டன் ரேசன் அரிசி வந்தது. இந்த அரிசி மூட்டைகள் பாளை மற்றும் டவுனில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.ஓரிரு நாட்களில் அந்தந்த ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.