சிவகங்கை, மே 16- சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகள் இரண்டு மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றப் படும் என்று டாஸ்மாக் கோட்ட மேலாளர் வேலு மணி, காவல் துறை கூடுதல் கண்காணிப் பாளர் உறுதியளித்தனர். சாலைக் கிராமம் பேருந்து நிலைய வளாகத்தில் டாஸ் மாக் கடை இரண்டு உள்ளது. இதனால், பேருந்து நிலை யத்திற்கு வரும் பெண்களு க்கு பாதுகாப்பற்ற சூழ் நிலை இருந்து வருகிறது. இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத் தப்பட்டன. இந்நிலையில், திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கோட்ட மேலாளர் வேலுமணி, காவல்துறை உதவி கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர், இளையாங்குடி வட்டாட்சி யர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் தண்டியப்பன், முத்துராம லிங்க பூபதி, தாலுகா செய லாளர் ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் மெய்யப்பன், மாதர் சங்க மாநிலச் செய லாளர் சசிகலா, மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியா, இளையான்குடி ஒன்றிய செயலாளர் ஜெயந்தி, மாவட் டக் குழு உறுப்பினர் அழ கர்சாமி, வாலிபர் சங்க ஒன் றிய செயலாளர் புபேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் கோட்ட மேலாளர் வேலுமணி இரண்டு மாத காலத்துக்குள் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித் தார். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் ஏற்பட் டது. இதனால், போராட் டத்தை ஒத்திவைப்பதாக போராட்டக்குழு தெரிவித் தது.