மதுரை, மார்ச் 17- மதுரை அந்தநேரி பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என துணைமேயர் நாகராஜனும் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ள னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை அந்தநேரி பகுதியில் மாநக ராட்சி துணை மேயராகப் பொறுப்பேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன், பத்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, செல்லூர் அய்ய னார் கோவில் 28-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் ஆகியோருக்கு பாராட்டு விழா கிளைச் செயலாளர் ஐயப்பன் தலைமை யில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் மா. கணேசன், பகுதி குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ராதா, கே. அலாவுதீன் மற்றும் திமுக நிர்வாகி ஆழ்வார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற துணைமேயர் நாகராஜன், மதுரை அந்தநேரியில் வசிக்கும் மக்களுக்கு மயானம், பாதாள சாக்கடை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப் பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும் சாதிச் சான்றிதழ் பெறுவதில் பிரச்சனை உள்ளது அவற்றை பெற்றுத் தருவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித் தார்.