தேனி, ஆக.20- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியகுளம் அருகே நடை பெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 317 பேருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா பணி நியமன ஆணைகளை வழங்கினார். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறு வனங்கள் கலந்து கொண்டன . 2858 மாண வர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்த னர். அதில் 317 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். என மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சுமிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், எண்டப்புளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னபாண்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .நாராயண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.