தேனி, ஏப்.25- அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் குழந்தைகள் வருகை பதிவு கணக்கின்படி அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட் டத்தை அரசு கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற அங்கன்வாடி உதவியாள ருக்கு பதவி உயர்வு வழங்க வேண் டும், அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு உருளைக்கான முழு தொகை வழங்க வேண்டும், மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், வாடகை கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங் களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வாடகை நிர்ணயித்து வழங்க வேண்டும், ஓய்வூதியப் பயன்களை காலதாம தமின்றி வழங்க வேண்டும், ஊழி யர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மூன்றாம் கட்ட போராட்டமாக காத் திருப்பு போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஓ. சாந்தியம்மாள் தலை மை வகித்தார்.போராட்டத்தை ஆதரித்து .சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி.ஜெயபாண்டி ,சத்து ணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பே.பேயத்தேவன் ,கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சண்முகம், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கே.துரை ராஜ், வாலிபர் சங்க செயலாளர் டி.நாகராஜ் ஆகியோர் பேசினர். மாநில நிர்வாகி நாகலட்சுமி, மாவட்டச் செயலாளர் என்.வனிதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மாவட்ட தலை வர் பி. ராஜேஸ்வரி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. மாநில செயற்குழு உறுப் பினர் வி. சாந்தி முன்னிலை வதித்தார். மாவட்ட செயலாளர் அ. வரதலட்சுமி கோரிக்கைகளை விளக்கி பேசினார், சிஐடியு மாவட்ட தலைவர் ஆர். தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் இரா. லெனின் சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.அமுதா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் க. நீதி ராஜா உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் போரா ட்டத்தை ஆதரித்துப் பேசினர். இராமநாதபுரம் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற காத்திருப்புப் போராட் டத்திற்கு மாவட்டத்தலைவர் எம். உமாராணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி, மாநிலச் செயலாளர் கே. சாந்தி, மாவட்டச் செயலாளர் கே. மல்லிகா, மாவட்ட பொருளாளர் கலாவதி ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முருகேஸ்வரி, மாவட்ட செயலாளர் டி.சேகர் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர்.