districts

img

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்.28-இல் கால்நடைகளுடன் போராட்டம்

கடமலைக்குண்டு, ஏப்.18- மலை மாடுகளை வனப்பகுதியில் மேய்க்கக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை ஆட்சேபித்து ஏப். 28-ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் திங்களன்று தெரிவித்தார். தேனி மாவட்டம் தும்மக்குண்டு, மேகமலை, சிங்கராஜபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த 500- க்கும் மேற்பட்ட வன விவசாயிகள் பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் திங்களன்று கடமலைக்குண்டில் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதா வது: கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் மேகமலை, வருஷநாடு உள் ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த வன விவசாயிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்றத்தில் வனத்துறை கூறிய தகவல்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. முற்றிலும் ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்  டுள்ளது. விவசாயிகள் ஒன்றிணைந் தால் எந்தத் தீர்ப்பையும் மாற்றும் நிலை வரும். 

வனங்களில் விவசாயம் செய்ப வர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் உடனிருக்கும்.  மலைக்கிராம வன விவசாயிகள் அனைவருக்கும் வன உரிமைச் சட்டத்  தின் படி பட்டா கிடைக்க சட்ட நட வடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள் ளப்படும்.   மலை மாடுகளை வனப்பகுதியில் மேய்க்கக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை ஆட்சேபித்து ஏப். 28-ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் போராட்டம் நடைபெறும். போராட்டத்தில் மலை மக்கள் தங்க ளது கால்நடைகளுடன் பங்கேற்க வேண்டும் என்றார்.  இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் அண்ணாமலை, தமிழ்நாடு விவ சாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்டச் செயலாளர் கண்ணன், தும்மக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னழகு, சின் னக்காளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்  போஸ், மலை மாடு வளர்ப்போர் சங்கத் தலைவர்கள் கென்னடி, கபி லன், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தேனியில் செய்தியா ளர்களிடம் பேசிய பெ.சண்முகம், மாவட்டத்தில் போடி, பெரியகுளம், கம்பம் ஆகிய வட்டாரங்களில் கோடை மழை காரணமாக மா. வெற்றிலை,  வாழை பயிர்கள் பாதிக்கப்பட்டுள் ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி பயிர் இழப் பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை ஏற்கக் கூடாது 

மாநிலங்கள் அவர்களது சொந்த நிதியில் அணைகள் கட்டுகின்றன.  தற்போது பாஜக ஒன்றிய அரசு அணை கள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அணையின் நீர்மட்டம், நீர்திறப்பு உள்ளிட்ட அம்சங்களை அந்த குழுவே தீர்மானிக்கும் நிலை உள்ளது. மாநில அரசுகளின் அதிகா ரத்தை பறிக்கும் இந்தச் சட்டத்தை தமி ழக அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும்.

சேலம் எட்டு வழிச்சாலை 

திமுக தேர்தல் அறிக்கையிலும், முதல்வராக பொறுப்பேற்ற பின் ஸ்டா லின், பிரதமரை நேரில் சந்தித்த போதும் சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தற்போது அமைச்சர் நிலை யை மாற்றிக் கூறுவதை ஏற்க முடி யாது. பத்தாயிரம் ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலம், வீடுகள், கிணறுகள் அழி யும் நிலை ஏற்படும். முல்லைப்பெரியாறு அணை விஷ யத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அணை பலமாக உள்ளது. 142 அடி வரை தேக்க லாம். பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடி தேக்கலாம் என்றார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கே. ராஜப்பன், டி.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்தி ரன் ஆகியோர் உடனிருந்தனர்.