அரசு மருத்துவர் டி.சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளார். அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. “அக்டோபர் 30 அன்று மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவல கத்திற்கு சென்ற மருத்துவர் சுரேஷ் பாபு, அங்கு பார்வையாளர் பதிவேட்டில் பெயர், செல்போன் எண் மற்றும் ஊர்: திண்டுக்கல் என பதிவு செய் துள்ளார்.
“அக்டோபர் 30 அன்று மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவல கத்திற்கு சென்ற மருத்துவர் சுரேஷ் பாபு, அங்கு பார்வையாளர் பதிவேட்டில் பெயர், செல்போன் எண் மற்றும் ஊர்: திண்டுக்கல் என பதிவு செய் துள்ளார்.
அதைத்தொடர்ந்து சுரேஷ் பாபுவை, காரில் ஏற்றிக்கொண்டு ஒரு மணி நேரம் சுற்றிய படியே பேரம் பேசிய அங்கித் திவாரி, ‘பிரதமர் அலுவலகத்தில் இருந்து உங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சொன்னதாக உயர் அதிகாரி கூறி யிருக்கிறார்; அதற்கு சுரேஷ் பாபு அளித்த பதிலை, ஆங்கிலத்திலும், இந்தியிலும் அங்கித் திவாரி தொலைபேசி மூலமாக அதிகாரியி டம் விளக்கியுள்ளார். பின்னர், உயர் அதிகாரி, ரூபாய் 51 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும் எனவும், அதனை புதன்கிழமை (1.11. 2023) அன்று தயாராக வைத்திருக்குமாறும், அவர் சொல்லும் இடத்தில் வந்து கொடுக்க வேண்டும் என்று அங்கித் திவாரி உத்தரவு போட் டுள்ளார். அதன்படியே நவம்பர் 1 அன்று முதல் தவணையாக ரூபாய் 20 லட்சத்தை கொடுத்த போது, மொத்தப் பணத்தையும் தராவிட்டால் தனது மேல் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட் டார்கள் எனவும், சுரேஷ் பாபு மீதான புகாரினை முடித்துவைத்து மேல் அதிகாரிகளுக்கு கடந்த 31.10.2023 அன்றே அனுப்பிவிட்ட தாகவும், அங்குதான் புகார் தற்போது நிலுவை யில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 1 அன்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ. 20 லட்சம் பணம் பெற்றபோது டாக்டர் காரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் பதிவாகி யுள்ளது. பணம் தன்னிடம் கொடுத்தது தொடர் பாக யாரிடமாவது தெரிவித்தால், உங்கள் மீதும், உங்கள் மனைவி மீதும் அமலாக்கத்துறை கடு மையான நடவடிக்கை எடுக்கும் எனவும் அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.
பின்னர், மீண்டும் 01.11.2023 காலை 8.54 மணிக்கு டாக்டர் சுரேஷ் பாபுவை, வாட்ஸ் ஆப் காலில் தொடர்பு கொண்டு முழு பணத்தை யும் வாங்காமல், ஏன் இந்த பணத்தை வாங்கி னீர்கள் என்று மேல் அதிகாரிகள் திட்டியதாக வும், மீதிப் பணம் ரூபாய் 31 லட்சத்தை கண்டிப் பாக அடுத்த புதன்கிழமை 08.11.2023 அன்று கொடுக்க வேண்டும் என்றும் அங்கித் திவாரி கூறியுள்ளார். மீண்டும் 03.11.2023 மற்றும் 06.11. 2023, 08.11.2023 ஆகிய தேதிகளிலும் சுரேஷ்பாபு வை வாட்ஸ் ஆப் காலில் தொடர்பு கொண்டு பணத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, பணம் 20 லட்சம் தயா ராக இருப்பதாக கூறிய நிலையில் வேறு ஒரு முக்கியப் பணியாக சென்னைக்கும், தில்லிக் கும் செல்வதாகவும், அதுவரை நீங்களே பணத்தை பத்திரமாக வைத்திருங்கள்; சீக்கி ரம் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிய அங்கித் திவாரி, இவ்வளவு பணத்தை நீண்ட நாள் கையில் வைத்திருக்க முடியாது என கூறி யதற்கு, உங்களுக்கு ஹவாலா பணம் பரி மாற்றம் செய்பவர்கள் யாரும் தெரியாதா? அவர் களிடம் கொடுத்து அனுப்ப
அதன்பின்னர் கடந்த 29.11.2023 அன்று காலை 8.31 மணிக்கு வாட்ஸ் ஆப் காலில் தொடர்பு கொண்டு திண்டுக்கல் பகுதியில் ஒரு வேலை இருப்பதாகவும், அந்த வழியே வரும்போது பணத்தை பெற்றுக்கொள்வதாகவும், தயா ராக வைத்திருங்கள் என்றும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் கூறியுள்ளார்.முடியுமா? என்றும் அங்கித் திவாரி கேட்டுள்ளார். மேலும், லஞ்சம் பெறுவது தொடர்பாக நீங்கள் யாரிடமும் தெரி விக்கக் கூடாது எனவும், அப்படி ஏதாவது செய் தால் உங்கள் மீது எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார்.
இந்த விசயத்தை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள், இதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும், கவனமாக இருங்கள், உங்கள் நல்லதுக்குத்தான் கூறுகிறேன் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆனால், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் மிரட்டல்களால் மனவிரக்திய டைந்த மருத்துவர் சுரேஷ் பாபு, தன்னை மிரட்டி, நிர்ப்பந்தம் செய்து ஏற்கனவே 01.11.2023 அன்று ரூ.20 லட்சத்தைப் பெற்றுக் கொண்டதுடன், மேலும் ரூ. 31 லட்சத்தை தரவில்லை என்றால் என்மீதும், என் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்து எனது மருத்துவ சேவையினை களங்கப் படுத்தி விடுவதாக தெரிவித்து மன உளைச்ச லுக்கு ஆளாக்கியதாகவும், அவர் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித் துள்ளார்.
அங்கித் திவாரி ஹர்திக் என்ற பெயரிலான தொலைபேசி அழைப்பு மூலமே தன்னை தொடர்பு கொண்டதால் ஹர்திக் என்ற பெயரை குறிப்பிட்டே மருத்துவர் சுரேஷ் பாபு போலீஸில் புகார் அளித்துள்ளார்.