விருதுநகர், அக்.8- தமிழக முழுவதும் பணி புரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர் களுக்கு ரூ.5 லட்சமும் பணிக் கொடை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் களை நிரந்தரம் செய்திட வேண்டும். குடும்ப பென்சன் பணியாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரமும், உதவியா ளர்களுக்கு ரூ.9 யிரமும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங் கத்தின் விருதுநகர் மாவட்ட 6 ஆவது மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. விருதுநகரில் எம்.ஆர்.வி நினைவகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலை மை தாங்கினார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் டெய்சி நிறை வுரையாற்றினார். மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவராக எஸ்தர்ராணி, செயலாளராக பாண்டியம்மாள், பொருளா ளராக பூங்கொடி, மாநில செயற்குழு உறுப்பினராக சத்யா ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.