மலப்புறம், ஜுன் 30- செவ்வாயன்று கால மான சிபிஎம் மூத்த தலை வரும், கேரள முன்னாள் அமைச்சருமான டி.சிவதாச மேனனுக்கு உணர்வுப்பூர்வ மான பிரியாவிடை அளிக் கப்பட்டது. முதல்வர் உள் ளிட்ட தலைவர்கள், கட்சி யினர், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். முதல்வர் பினராயி விஜ யன், சபாநாயகர் எம்.பி. ராஜேஷ், அமைச்சர்கள் எம்.வி.கோவிந்தன், கே.ராதா கிருஷ்ணன், பி.ராஜீவ், கே. கிருஷ்ணன்குட்டி, பேராசி ரியர். ஆர்.பிந்து, வி.அப்துல் ரஹ்மான், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன், மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பாலன், மூத்த தலைவர் பாலோலி முஹமதுகுட்டி, முஸ்லிம் லீக் மாநிலத் தலை வர் சாதிக்கலி சிஹாப் தங் கல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி னர். இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு இரங்கல் கூட்டம் நடை பெற்றது. அரசு மரியாதை யுடன் இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது. அன்புத் தலை வரை கடைசியாகப் பார்க்க ஆயிரக்கணக்கான தலை வர்களும் தொண்டர்களும் குவிந்தனர்.