மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கள்ளழகர் எதிர்சேர்வை நடைபெறும் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நூற்றாண்டு பழமை மிக்க ஆயிரம் பொன் சப்பரம் மராமத்து செய்து புதுப்பிக்கும் பணியும் துவங்கி உள்ளது.