மதுரை, செப்.13- மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுகலை, விலங்கி யல் ஆராய்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு அருங்காட்சி யகம் இணைந்து விலங்கு களை பதப்படுத்தும் தொழில் நுட்பமான ‘டாக்ஸிடெர்மி’ பயிற்சிப் பட்டறையை செப்.12 முதல் 14 வரை மதுரை அமெரிக்கன் கல்லூ ரியில் நடத்துகிறது. பயிற்சியை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் முனைவர் ம.தவமணி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். மதுரை அருங்காட்சியகத் துறை மாவட்டக் கண்காணிப்பா ளர் எம்.மருதுபாண்டியன், முதுகலைத் தலைவர் முனை வர் இ.ஜாய் ஷர்மிளா, இளங் கலைத் தலைவர் முனைவர் பி.வெள்ளைத்துரை ஆகி யோர் பேசினர். இதில், பூச்சிகள், முது கெலும்பு மாதிரிகள், முட்டை கள் (உலர்ந்த மற்றும் ஈர மான இரண்டும்) பதப்படுத்து வது மற்றும் ஸ்லைடுகளில் பூச்சிகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் முறைகள் குறித்து 40 மாணவர்கள் பயிற்சி எடுக்கின்றனர்.