districts

img

மாற்றுத் திறனாளிகள்  பகுதிக் குழு மாநாடு

மதுரை, ஜூன் 20-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை வடக்கு 1 ஆம் பகுதிக்குழு மாநாடு எஸ். ராஜேந்தி ரன் தலைமையில் நடைபெற்றது, பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார், வி.மாரியப்பன் அமைப்பு கொடியினை ஏற்றி வைத்தார். மஞ்சுள அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டத் தலைவரும் மாநகராட்சி துணை மேயருமான டி.நாகராஜன் துவக்கி வைத்துப் பேசினார்.  மாவட்டச் செயலாளர் பி.வீரமணி, மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல், மாவட்ட நிர்வாகிகள் பா.பழனியம்மாள்,  ஏ. பாலமுருகன், பொருளாளர் எல். தங்கவேல் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் பி. ஜீவா  நிறைவுரையாற்றினார். பி.மனோகரன் நன்றி கூறினார். பகுதிக்குழு தலைவராக எஸ். ராஜேந்திரன், செயலா ளராக பஞ்சவர்ணம், பொருளாளராக மேரி உள்ளிட்ட 9 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது.  மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக  உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையான மாற்றுத் திற னாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த  வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

;