மதுரை, ஆக.5- அரசு போக்குவரத்து மதுரை மண்டலம் தலைமை யகம் முன்பு புறநகர் கிளை யில் 3 டூட்டிகளாக ஓடிக் கொண்டிருந்த பேருந்து களை 2 டூட்டி பவுச்சர் என மாற்றியதை கண்டித்தும், பேருந்துகளுக்கு தேவை யான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும். புதிய பணியா ளர்களை நியமனம் செய்ய வேண்டும். தொழிலாள ருக்கு தேவையான விடுப்பு களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை யில் அனைத்து சங்கங்களின் சார்பாக சிஐடியு கிளை தலைவர் பி.அமர்ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் ஏ. கனகசுந்தர், ஏடிபி சங்க பொதுச் செயலாளர் ஜெய ராஜ், தேமுதிக தொழிற் சங்க நிர்வாகி மூவேந்தரன், ஐஎன்டியுசி நிர்வாகி பாண்டி, ஏஐடியுசி வீரபத்திரன், டியூ சிசி நிர்வாகி வேல்முருகன், பிஎம்எஸ் நிர்வாகி லட்சும ணன் ஆகியோர் விளக்கிப் பேசினர். சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்க துணைப் பொதுச் செயலாளர் எஸ்.செல்வராஜ் நிறைவுரையாற்றினார்.