கடலூர், ஜூலை 18- பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யும் முடிவிற்கு எதிர்ப்பு தெரி வித்து அனைத்து கட்சிகள் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் புதிய பேருந்து நிலை யத்தை எம்.புதூரில் அமைக்க கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குள் மையமான இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும், தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும், அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை அறிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திலகர் (காங்கிரஸ்), சுப்ப ராயன், ராஜேஷ் கண்ணன், பக்கி ரான், அமர்நாத், (சிபிஎம்), ஆடிட்டர் சுந்தரமூர்த்தி (அமமுக), ராதா கிருஷ்ணன் (சிபிஐ), திருமார்பன் (விசிக), ரகுபதி (தமாகா), மருத வாணன், தலைவர் வெங்கடேசன் (குடியிருப்போர் நலச் சங்கம்), மூர்த்தி (மநீமை), வெண்புறா குமார், ரவி (பொது நல அமைப்பு), ரஹீம் (மமக), மன்சூர் (மஜக), பாலு (மக்கள் அதிகாரம்), வேங்கை வெங்க டேசன் (மீனவர் விடுதலை), குரு ராமலிங்கம் (தனியார் பேருந்து தொழிலாளர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.