districts

அழகர் கோவில் சாலை -கோட்டைச்சுவர்  கட்டும் பணிக்கு அடிக்கல்

 மதுரை,ஜூன் 10- மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர் கோவிலில் வெள்ளியன்று தமிழக முதலமைச்சரால் கீழ்க்கண்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  கோவிலின் வடகிழக்கு மூலையில் கோட்டை சுவர் கட்டும் பணி மதிப்பீடு தொகை ரூ.62 லட்சம்,  கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து ராக்காயி அம்மன் கோவில் வரை மலைப்பாதையில் 4 கிமீ அளவிற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி மதிப்பீட்டுத் தொகை ரூ.9 கோடியே 10 லட்சம், திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆடி  வீதியில் கல் தளம் அமைக்கும் பணி மதிப்பீட்டுத் தொகை ரூ.38 லட்சத்து 50 ஆயிரம், சோலைமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்டும் பணி மதிப்பீட்டு தொகை ரூ.49  லட்சம் ஆகும். இந்நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர் இராமசாமி,மண்டல செயற் பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர், மேலூர் ஒன்றிய செயலாளர் குமரன் ஊராட்சி மன்ற தலைவர்  தீபா தங்கம், அழகர்கோவில் கிளைக் கழகச் செயலாளர் முத்து பொருள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் திருக்கோவின் தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் மற்றும் பணி யாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.