மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17 செவ்வாயன்று நடைபெற்றது.போட்டியை கண்டு ரசித்த மக்களில் ஒரு பகுதியினர். இதில் முதலிடத்தை பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த வீரர் அபி சித்தருக்கு பரிசாக கார், இரண்டாம் இடத்தைப் பிடித்த ஏனாதியைச் சேர்ந்த வீரர் அஜய்க்கு பரிசாக இருசக்கரவாகனம், மூன்றாம் இடத்தைப் பிடித்த அலங்காநல்லூரைச் சேர்ந்த வீரர் ரஞ்சித்துக்கு பரிசாக இருசக்கர வாகனம் ஆகியவற்றை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உடனிருந்தார்.