மதுரை, மார்ச் 13- சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத் தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அமுமுகவை சேர்ந்த ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்ச்சித்தார். அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டார். இதைத் தாங்க முடியாத அதி முகவினர் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட நான்கு பேர் மீது மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அதிமுகவினர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்த வர்கள் தங்களது வாகனங்களை நினைத்த இடங்களில் எல்லாம் நிறுத்தினர். இதனால் பழங்காநத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எதிர்பார்த்த கூட்டம் வராததை மறைப்பதற்கு அதிமுகவினர் போக்கு வரத்து ஸ்தம்பிக்கும் அளவிற்கு வாகனங்களை நிறுத்தி யுள்ளனர் என கூறிக்கொண்டே சாலையை கடந்து சென்ற னர் வாகன ஓட்டிகள்.