districts

img

மதுரையின் வளர்ச்சிக்காக அதிமுக செயல்படவும் இல்லை நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதும் இல்லை

மதுரை, நவ. 19-  மதுரையின் வளர்ச்சிக்காக அதிமுக செயல்படவும் இல்லை; நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள சு. வெங்கடேசன் எம்.பி., மதுரை யின் வளர்ச்சிக்காக பாடுபடாத அதிமுக ,மக்க ளின் நலனுக்காக தொடர்ந்து போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குற்றம் சாட்டுவதா? என்று சாடியுள்ளார்.  மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகு புரத்தில் மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ .14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல வரு டங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த சோலை யழகுபுரம் மெயின்ரோடு ஜானகிநகர் இணைப்பு பாதை பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு  திறந்து வைக்கப்பட்டது ஆகியவற்றை விளக்கியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில அலுவலக கட்டிட நிதியை வழங்கி அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு 2 ஆம் பகுதிக்குழு 88 ஆவது வார்டு கட்சிக் கிளைகள் சார்பில்  வெள்ளியன்று  சோலையழகுபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் கே. குரோனி செந்தில் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள்  ஏ. வல்லையப்பன் , எம்.செந்தில் , எஸ்.ராஜா, எம்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான  சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்- மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். பாலசுப்பிர மணியன்,  பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், இரா. லெனின், ஜெ. லெனின் உள்பட பலர் கலந்துகொண்ட னர். கிளைச் செயலாளர் ஏ. சந்திரமோகன் நன்றி கூறினார். கூட்டத்தில் பகுதிக்குழு செயலாளர் செந்தில் குமார் பேசுகையில், மதுரையில் போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள்  அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் போன்ற பகுதி களில் இளைஞர்கள் போதை மாத்திரைகள், கஞ்சாப் போன்றவைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடை பெற்று வருகிறது. இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் பேசுகையில், போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை தடுப்ப தற்கு தலைக்கவசம் அணியச் சொல்கிறார் கள்.ஆனால் இங்கு சாலைகளே சரியாக இல்லை. இதனால் விபத்துக்கள் நிகழ் கின்றன. சாலையை சரி செய்வது யார்? அபராதம் என்ற பெயரில்  ஆயிரம், இரண்டா யிரம் ரூபாய் என்று மக்களிடம் பணத்தை  பிடுங்கும் போக்கு சரியில்லை.  அனைத்தை யும் முறைப்படுத்தி செயல்படுத்துங்கள் என்று  கூறினார்.

மாவட்டச் செயலாளர் மா. கணேசன்  பேசுகையில், சோலை அழகுபுரம் பகுதியில் கே.பி. ஜானகி அம்மாள் பெயரில் உள்ள தெருவுக்கான பாதை பெரும் போராட்டத்தி ற்குப் பின் திறக்கப்பட்டுள்ளது .அதிமுக மாமன்ற உறுப்பினர் இதற்கு பல்வேறு இடை யூறுகளை ஏற்படுத்தியுள்ளார். மக்களின் அடிப்படை தேவைகளுக்கான போராட்டங்க ளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். வருகின்ற நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் மதுரையில் பகுதிக்குழுவிற்கு மூன்று இடங்களில் மக்கள் அடிப்படை பிரச்ச னைகளை முன்வைத்து போராட்டம் நடத்து வதற்கு முடிவு செய்துள்ளோம். மக்களின் அடிப்படை தேவைகளுக்காக போராடக் கூடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை அதிமுக புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில்.  கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி யில் சிறு குறு தொழில்கள் மதுரையில் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது. இது போன்ற தொழிற்சாலைகள் அமைப்பதற் கான இடங்கள் இல்லை. சோலை அழகு புரத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலை கள் இருந்த இடத்தில் தற்போது இல்லை. எதனால் தொழில் வளர்ச்சி  மதுரை மாவட்டத்தில் மிகவும் குறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதை மேம்படுத்த வே இல்லை. இது போன்ற தொழிற்சாலை கள் ஒரே இடத்தில் இயங்குவதற்கு ஏதாவது ஒரு இடத்தை உருவாக்கியுள்ளீர்களா? திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்  கட்சி முதல்வருக்கு கோரிக்கை வைத் தோம். அதன் தொடர்ச்சியாக  மதுரையில் சிப்காட் தொழிற்சாலை உருவாக்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல் 2006க்கு பின் மதுரையில் ஐடி தொழில்நுட்ப பூங்கா  உருவாக்கப்படவில்லை. இன்றை க்கு திமுகவுடன் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரையிலி ருந்து ஐடி தொழிலில் ஈடுபடும் பல்வேறு மாணவர்கள் சென்னையில் தான் உள்ளார் கள். 60 சதவிகிதம்  மாணவர்கள் உள்ளனர். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்  பணியாற்றுகிறார்கள். எனவே மதுரையில் ஒரு ஐடி பூங்கா உருவாக்க வேண்டும் என்ற  கோரிக்கையின் அடிப்படை யில் தமிழக முதல்வர் தற்போது அதற்கான இடத்தினை ஒதுக்கி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இருந்த அதிமுக அரசு ஏன் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வில்லை. மதுரை விமான நிலையத்தை சர்வதேச  விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று  தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. நானும் நாடாளு மன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறேன்.

இது பற்றி அதிமுக உறுப்பினர்கள் வாய் திறக்காதது ஏன்?. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்ய முடியாததை இன்றைக்கு மதுரை யில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற  அடிப்படையில் செய்துள்ளேன். அதுதான் மாணவர்களுக்கான கல்விக் கடன். தமிழ கத்திலேயே கல்வி கடன் வழங்குவதில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களே மதுரை மாவட்ட ஆட்சியரை பாராட்டியுள்ளார்.  பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒரு ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களை கூட மதுரைக்கு கொண்டு வர முடியவில்லை.  மக்களுக்கான அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று கூறினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதியாக பகுதிக்குழுக்கள் சார்பில் வசூ லிக்கப்பட்ட ரூ. 5 லட்சத்து 25 ஆயிரத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலா ளர்கள் வழங்கினர். சீனிவாசா அப்பளம் உரிமையாளர் சீனிவாசன்  மாநிலக்குழு கட்டிட நிதியாக ரூ.10 ஆயிரத்தை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் வழங்கினார்.