மதுரை ஜூலை17- திண்டுக்கல் மாவட் டம் மாவூத்துபட்டி ஊராட்சியை சேர்ந்தவர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4வது முறையாக வெற்றி பெற்றவர் என்று கூறப் படுகிறது. இந்த நிலையில் அவர் லிங்கவாடி பகுதி யிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாக னத்தில் சென்றார். அப்போது வழி மறித்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரி யாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. இதனால் ரத்தவெள்ளத்தில் சந்திர பாண்டி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பாலமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.