districts

img

150 நாட்கள் ஊரக வேலை வழங்க கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அருமனை, ஜூன் 29- மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்படும் நூறுநாள் வேலையை 150  ஆக உயர்த்தக் கேட்டும் தினக்கூலியாக அரசு அறிவித்துள்ள ரூ.281 முழுமையாக வழங்குவதுடன் கூடு தலாக ரூ.100 கேட்டும் கன்னியா குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று (ஜுன் 28) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் ஹச்.ராஜதாஸ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி, மாவட்டத் தலை வர் என்.எஸ் கண்ணன், மருதங் கோடு ஊராட்சி தலைவர் ராஜேந் திரன், மஞ்சாலுமூடு ஊராட்சி துணைத்தலைவர் பி.சசிகுமார், முழுக்கோடு ஊராட்சி துணைத் தலைவர் சி.சசிகுமார், மூத்த தோழர் தங்கப்பன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசால் ஊரகத் தொழி லாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை இதர வேலைகளுக்கு மாற்றுவதை கண்டித்தும், 60 வய தான அனைத்து முதியோர்களுக் கும் மற்றும் ஊரக தொழிலாளர்க ளுக்கு ம் பென்ஷன் வழங்கிடக் கேட்டும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தை முடக்கு வதை கண்டித்தும், அரசு சலுகை களை காலதாமதமின்றி வழங்கிடக் கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.