மதுரை, டிச.12- அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்க மேலூர் தாலுகா மாநாடு ஏ. தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை மாவட்டத் தலைவர் வி. உமாமகேஸ்வரன் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வி.அடக்கிவீரணன், தாலுகா செயலாளர் ஏ.இராஜேஸ் வரன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், பி.எஸ்.ராஜாமணி, சிஐடியு சார்பில் வி.சேகர், ஆகியோர் வாழ்த் திப் பேசினர். மாவட்டச் செய லாளர் சொ.பாண்டியன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் தாலுகா தலைவராக பி.குமரன், செய லாளராக ஏ.தனசேகரன், பொருளாளராக கே.கணே சன் உட்பட ஒன்பது பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். விவசாயத் தொழி லாளர்களுக்கு பென்ஷன் மாதம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.