திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜனவரி 25 அன்ற ஆத்தூர் மற்றும் வத்தலகுண்டு வட்டார தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கால்நடை வளர்ப்போருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு ஆத்தூர், கன்னிவாடி, செம்பட்டி, வத்தலகுண்டு பகுதிகளை சேர்ந்த 376 பயனாளிகளுக்கு ரூ.202.28 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவித்தொகையை வழங்கினார். வேலுச்சாமி எம்.பி.,மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன், ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், வத்தலக்குண்டு ஒன்றிய பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.