districts

img

45 நாட்களாக நடத்திய எம்எம்எப் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி

 சிவகங்கை, மார்ச் 10-  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம்எம் போர்டிங் லிமிடெட் தொழிலாளர்களுக்கு சட்டப்படி தொழிலாளர்களுக்கு சட்ட சலுகைகளை செயல் படுத்த வலியுறுத்தி கடந்த 45 நாட்களாக நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை பங்கேற்று பேசினார்.  போராட்டம் சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா தலைமை யில், மாவட்ட செயலாளர் சேது ராமன் முன்னிலையில் நடை பெற்றது. சிங்கம்புணரி பேருந்து நிலை யம் எதிரில் நடைபெற்ற போராட் டத்தில் சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஆர்.கே.தண்டியப்பன், சிஐ டியு மாவட்ட பொருளாளர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தொழிற்சாலை தொழிலாளர் கள் மற்றும்  மாதர் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர்  திரளா னோர் கலந்து கொண்டனர்.  பின்னர் சிங்கம்புணரி பேருந்து நிலையலிருந்து 2 கி.மீ., தூரமுள்ள தொழிற் சாலைக்கு செங்கொடியோடு ஊர்வலமாக சென்றனர். தொழி லாளர் பாதிப்பு குறித்து சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை கேட்டறிந்தார்.  தொழிலாளிகள் ராமன் (27) கூறும்போது, நான் ஐடிஐ பிட்டர், பாலிடெக்னிக் படித்திருக்கி றேன். வேலையின்போது எனக்கு கைமுறிவு ஏற்பட்டதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை என்றார்.  முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து தேவகோட்டை கோட்டாட்சியர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான சின்னத் துரை முன்னிலையில் தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  எம்எம்எப் 110 தொழிலா ளர்கள் எந்தவித நிபந்தனையும் இல்லாது மார்ச் 11 முதல் வேலைக்கு வரலாம் என்றும், மாறுதல் செய்யப்பட்டவர்கள் ஒரு வாரத்திற்குள் இங்கே வேலைக்கு அனுமதிக்கப்படு வார்கள் எனவும் எழுத்துப் பூர்வ மாக எழுதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முடித்து வைத்தார்.