districts

img

தொடர் போராட்டத்தால் சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தர ஒப்புதல்

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இராஜபாளையம், ஜூன் 5- விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலை யில் ராஜபாளையம் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கூலி உயர்வு தர விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.  விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே சத்திரப்பட்டி, சமு சிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்ய னாபுரம் போன்ற பகுதிகளில் பேண்  டேஜ் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணி யாற்றி வருகிறார்கள். 3 ஆண்டுகளுக் குப் பின்னர் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் நிறை வேற்றப்படாததால் மே 24 ஆம் தேதி  முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை அனைத்து தொழிற்சங்கங்கள் தலைமையில் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழ மையன்று இரவில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வட்டாட்சியர் சீனிவாசன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன், ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் உற்பத்தியாளர் சங்க தலை வர் செந்தில் ராஜ் தலைமையில் விசைத்  தறி உரிமையாளர்களும், தொழிற் சங்கங்கள் சார்பில் முனியாண்டி, சக்தி வேல்(சிஐடியு), ஆர்.பி. முத்துமாரி, ராமச்சந்திரன் (ஏஐடியுசி) ஆகியோர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை நடை பெற்றது.  பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தப்  படி கூலி உயர்வு தருவதற்கு விசைத்  தறி உரிமையாளர்கள் ஒப்புக் கொண்ட னர். இதையடுத்து போராட்டம் முடி வுக்கு வந்தது. ஜூன் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி தொழிலாளர்கள் சார்பில் கஞ்சித் தொட்டி திறப்பதாக இருந்த போராட்ட மும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்  கப்பட்டது. ஞாயிறன்று முதல் தொழிலா ளர்கள் அனைவரும் வேலைக்கு சென்ற னர்.