திண்டுக்கல், ஏப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்டத்தையடுத்து கேத்தம் பட்டிக்கு சாலை அமைத்து தர ஊராட்சி மன்ற நிர்வாகத்தோடு நடை பெற்ற பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந் தூரை அடுத்துள்ளது கேத்தம்பட்டி. வி.புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்திற்கு செல்லும் பாதையை தனி நபர் ஆக்கிரமித்துள் ளார். காலம்காலமாக இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த இந்த பாதை தற்போது சிதைக்கப்பட்டுள் ளது. பாலங்கள் உடைக்கப்பட்டுள் ளன. இதன் காரணமாக கேத்தம் பட்டிக்கு செல்லும் மக்கள் பாதை யின்றி தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் ஊர்ச் சாலையை ஆக்கிரமித்து அழித்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நில புரோக்கர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகள் பள் ளிக்கு சென்று வர கிராம மக்கள் வேடசந்தூர் நகரத்தோடு துண்டித்து விடாமல் இருக்க உடனடியாக சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக சாலைமறியல் போரா ட்டம் நடைபெற்றது. இதனையடுத்து வேடசந்தூர் வட்டாட்சியர் மணிமொழி தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச் சாமி, வேடசந்தூர் ஒன்றியச்செயலா ளர் எம்.பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, சவட முத்து, அழகர்சாமி , நாகப்பன், டி.பி. முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலங்காலமாக கேத்தம்பட்டி பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதை யை யாரும் மறிக்கக்கூடாது. அவ் வாறு மறிப்பவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊராட்சி தலைவர் சாலையை செப்ப னிட்டு தருவார் என்றும் பேச்சு வார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தமுயற்சிக்கு கேத்தம்பட்டி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.