districts

img

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் போராட்டம் ஒத்தி வைப்பு

சென்னை, மே 8 - டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணித் தொழிலாளர்கள் இறக்குக் கூலியை உயர்த்தி வழங்கக் கோரி 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற் காலிகமாக ஒத்தி வைத்துள் ளனர். தமிழ்நாடு முழுவதும் 43 அரசு மதுபான (டாஸ்மாக்)  கிடங்குகள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து  500க்கும் மேற்பட்ட சுமைப் பணி தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். ஆலை களில் இருந்து வரும் மது பான பெட்டிகளை குடோன் களில் இறக்கி வைப்பது, விற்பனையகங்களுக்கு ஏற்றி அனுப்புவது ஆகிய பணிகளை செய்கின்ற னர். ஆலை நிர்வாகங்கள்  இறக்கு கூலியாக, ஒரு மது பான பெட்டிக்கு 5.50 ரூபாயும், பீர் பெட்டிக்கு 4 ரூபாயும் தருகின்றன. இந்த கூலியை 2  வருடங்களுக்கு மேலாகி யும் ஆலை நிர்வாகங்கள் உயர்த்தாமல் உள்ளன. எனவே, ஒரு பெட்டிக்கு 8 ரூபாய் கூலி உயர்வு வழங்க கோரி மே 6 முதல் பெட்டிகளை இறக்காமல் தொழிலாளர் கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாடு முழு வதும் டாஸ்மாக் கடைகளில் மதுபான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தின் மூன்றா வது நாளாக மே 8 அன்று  டாஸ்மாக் நிர்வாக இயக்கு நர் எல்.சுப்பிரமணியன், பொது மேலாளர் ஆனந்த் குமார் ஆகியோர், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) தலை வர் ஆர்.வெங்கடபதி, பொதுச் செயலாளர் ஆர். அருள்குமார், துணைத் தலைவர் எம்.எஸ். பீர்முகமது உள்ளிட் டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை யில், “இறக்குக் கூலியை  உயர்த்தி வழங்க வெகு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப் படும் என்று நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே,  போராட்டத்தை தற்காலி கமாக ஒத்தி வைக்கப்படு வதாக” சங்கத்தின் பொதுச்  செயலாளர் ஆர்.அருள் குமார் தெரிவித்துள்ளார்.