districts

img

முக்குடி உள்பட 22 கண்மாய்களுக்கு கால்வாய் அமைக்க நடவடிக்கை

சிவகங்கை, ஏப்.2-   சிவகங்கை மாவட்டம் முக்குடி ஊராட்சி உள்ளிட்ட 22 கிராம கண்மாய்களுக்கு கால்வாய் உருவாக்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசி வலியுறுத்திய மானா மதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமாரை அலுவலகத்தில் சந்தித்து முக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா உள் ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  முக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா, மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன்றிய செய லாளர் அய்யம்பாண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்புவனம் ஒன்றிய செயலாளர் பழனி வேல்,கொந்தகை திமுக செயலாளர் பாலமுருகன், சுற்றுச்சூழல் அணி செயலா ளர் பாலமுரளி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மேலும் மனு கொடுத்து பேசினர்.  இதுகுறித்து முக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா கூறுகையில், முக்குடி, வடுகன்குளம், கருங்காலக்குடி ,ராக்கன் குளம், கொம்பையேந்தல், சின்ன மருதங்குளம், உலை காஞ்சிரங்குளம், செங்  குளம், பெரிய மருதங்குளம், வடக்கூர் சோலையார் யேந்தல் கண்மாய் உள்ளிட்ட  22 கண்மாய்கள் பயன்பெறு கிற வகையில் கால்வாய் உருவாக்க வேண்டும் என்று மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக் குமார் சட்டமன்றத்தில் பேசினார். இவர் பேசிய தற்கு நீர்வளத்துறை அமைச்சர் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வ தாக பதில் அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.