தேனி, ஜூன் 27- கம்பத்தில் உணவுப் பாது காப்பு அலுவலர்கள் மீன் கடைகளில் நடத்திய சோத னையில் 10 கிலோ கெட்டுப் பான மீன்கள் பறிமுதல் செய் யப்பட்டது. கம்பத்தில் மீன் கடை களில் கெட்டுப்போன மற்றும் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தேனி மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குனர் பஞ்சுராஜா, கம்பம் உணவு பாதுகாப்புத்துறை அலு வலர் மணிமாறன் மற்றும் மீன் ஆய்வாளர் கொண்ட குழு வினர் கம்பம் ஓடைக்கரைத் தெரு பகுதியில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப்போன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? ரசாய னம் தடவிய மீன்கள் விற் பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில கடைகளில் மொத்தம் 10 கிலோ கெட்டு போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீன்களை பறிமுதல் செய்த னர். அதே சமயம் மீன்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பார்மலின் கலக்கப்பட வில்லை என உறுதி செய்யப் பட்டது.மேலும் கெட்டுப் போன மீன்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.