districts

img

பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செவித் திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆண்டி, மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, வீரபாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தி, விஜயகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முனியராஜ், பரமாத்மா, முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.