districts

img

ஸ்கேட்டிங்கில் சாதனை  

சின்னாளபட்டி, ஜூன் 6- கர்நாடகா மாநிலம் பெல்காமில் மே 28-ஆம் தேதி முதல் ஜூன்- 3-ஆம் தேதி வரை ஸ்கேட்டிங் போட்டிகள் நடை பெற்றன. பல்வேறு மாநிலங்களிலிருந்து 400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  தமிழக அணியின் சார்பில் சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டரங்கில் பயிற்சிப் பெற்ற பி.அகிலன், பி.ஆதவன். ஜெயசூர்யா, ஹரி கோவிந்தன், ஏ.கார்த்திக்  நரேன், கே.வி.மோனி, எஸ்.கார்த்திகேயா, என்.நாக ராஜன், சுதர்ஷன காளீஸ் ஆகியோர் அணி மேலாளர் மாஸ்டர் பிரேம்நாத் தலைமையில் பங்குபெற்று உலக சாதனை படைத்து சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்ற னர். சாதனையாளர்களை மாஸ்டர் பிரேம்நாத் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.