districts

img

அரசுப் பள்ளி மாணவி அமெரிக்கா பயணம்

சின்னாளபட்டி, ஏப்.10- சிறார் திரைப்படத்தை இயக்கு தல் போட்டியில் முதலிடம் பிடித்து,  அமெரிக்கா செல்லும் வாய்ப்பை  சின்னாளபட்டியைச் சேர்ந்த அரசுப்  பள்ளி மாணவி பெற்றுள்ளார்.  தமிழக பள்ளிக்கல்வித் துறை  சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட  அரசுப் பள்ளி மாணவ-மாணவி களுக்கான கலைத்திருவிழா, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யது. அரசுப் பள்ளி மாணவர்களின்  பன்முக திறன்களை வெளிப்படுத்த நல்ல ஒரு களமாக கலைத்திருவிழா  அமைந்தது. இதில், ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.  இதன் தொடர்ச்சியாக கல்வி சாரா மன்றச் செயல்பாடுகளை அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு  முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மன்றம், சிறார்  திரைப்படம் இயக்குதல், வானவில்  மன்றம், வினாடி-வினா தொடர்பாக  பள்ளி அளவிலும் மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும் போட்டிகள் நடைபெற்றன. இதில், சிறார் திரைப்படம் இயக்கும் போட்டியில் தனிநபர் மற்றும் குழு  போட்டிகள் நடைபெற்றன.  “திரைப்படத்தின் ஒரு காட்சி யை இயக்குதல்” என்ற தனிநபர்  பிரிவில் திண்டுக்கல் மாவட்டம்  சின்னாளப்பட்டி அருகே அ.குரும்ப பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா என்ற மாணவி மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வானார். 

இதேபோல் பல்வேறு மாவட் டங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது அந்த  மாணவர்கள் குழுக்களாக பிரிக் கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு திரைப்படத்தின் ஒரு காட்சியை  இயக்குவது தொடர்பாக ஆறு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த போட்டியில், கீர்த்தனா உள்  பட 14 பேர் அடங்கிய குழு முதலி டத்தை பிடித்தது. இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அமெரிக்காவுக்கு அழைத்து செல்  லப்படுவார்கள் என்று ஏற்கனவே  பள்ளிக்கல்வி துறை அறிவித்தி ருந்தது. அதன்படி, கீர்த்தனா உள்  ளிட்ட 14 பேரும் அடுத்த மாதம் அமெ ரிக்கா செல்லும் வாய்ப்பை பெற்ற னர். இவர்கள், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகர் மற்றும் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கீர்த்தனாவின் பெற்றோர் மதன கோபால்- ராஜேஸ்வரி. பழைய இரும்பு வியாபாரம் செய்து வரு கின்றனர். கீர்த்தனாவின் அக்கா புவனா மேல்நிலைக் கல்வி முதலா மாண்டு படிக்கிறார், தம்பி ஜீவா னந்தம் நான்காம் வகுப்பு படிக்கி றார். கீர்த்தனா தெரிவித்ததாவது: போட்டியில் பங்கேற்க ஆசிரி யர்கள் ஊக்கமளித்து வழிகாட்டி உதவினர். மாவட்ட அளவில் தேர்  வாகி சென்னையில் ஆறு நாள் முகா மில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றது நல்ல அனுபவம்  வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பை தமிழ்நாடு அரசு  வழங்கி வருவது பெருமைக்  குரியது. மேல்நிலைக் கல்வி முடித்த பின்பு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில்  படித்து பட்டம் பெற்று எதிர்காலத்  தில் திரைத்துறையில்  சேவை யாற்ற விரும்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.     அமெரிக்க செல்லத் தேர்வாகி யுள்ள மாணவியை மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர் வளர்  மதி, வட்டாரக் கல்வி அலுவலர் கள் தேவ ஆரோக்கியதாஸ், ஆண்ட வன், பள்ளித் தலைமை ஆசிரியர் பொற்செல்வி, உதவித் தலைமை ஆசிரியர்  தங்க கண்மணி ஆசிரி யர்கள் ஜோஸ்பின் சீலி, ஜாக்கு லின் லீமா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பாரதி,  பள்ளி  மேலாண்மைக் குழு உறுப்பினர் கள் நிர்வாகிகள் பாராட்டினர்.