மலைமேல் போராட்டம் நடத்தும் பளியர் இன மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!
விருதுநகர் ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
விருதுநகர், ஆக.11- வத்திராயிருப்பு அருகே தாணிப் பாறை பகுதியைச் சேர்ந்த பளியர் இன மக்கள் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளக்காக மலைமேல் குடும்பங்களுடன் குடியேறி போராட் டம் நடத்தி வருகின்றனர். அவர்க ளது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப் பட்டது. அந்த மனுவில் கூறியதாவது : தாணிப்பாறை ராம் நகர் பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட பளியர் இன பழங்குடியினர் வசித்து வரு கின்றனர். இவர்கள் கடந்த 3 நாட்க ளாக மலைமீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கை என்னவெனில் மலைப் பகுதியில் இம்மக்கள் சர்பத் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள் ளனர். ஆனால், வனத்துறையினர் சர்பத், சோடா பாட்டில்கள் ஆகிய வற்றை பறிமுதல் செய்ததோடு, அதை உடைத்துள்ளனர். மேலும் இவர்களை சாதியைச் சொல்லி இழிவாக பேசியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பளியர் இன மக்கள், காலம் காலமாக, வனப்பகுதியில் உள்ள தேன், கிழங்கு, பட்டை போன்ற பொருட்களை சேகரித்து வந்தனர். அதற்கும் தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மலைப் பொருட்களை சேகரிக்க உரிய அனுமதி வழங்கிட வேண்டும். பக்தர்கள் மலை ஏறும் பகுதிகளில் கடை வைக்க வனத் துறையினர் அனுமதி வழங்கிட வேண்டும். அங்கு தங்களது ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி வழங்க வேண்டும். அரை குறையாக விடப்பட்ட மயானப் பாதையை சீர மைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு எம்.சுந்தர பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பி னர் சி.ஜெயக்குமார், தாலுகா செய லாளர் சி.பெனரி, பழங்குடியின மக்கள் சார்பில் கருப்பசாமி, மாயாண்டி ஆகியோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
“இந்தியா” கூட்டணி பெயருக்கு தடை இல்லை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி
புதுதில்லி, ஆக. 11 - எதிர்க்கட்சிகள் “இந்தியா” என கூட்டணி பெயர் வைக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, “இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி” (I.N.D.I.A - Indian National Develop mental Inclusive Alliance) என்ற விரிவாக்கத்தை சுருக்கி “இந்தியா” என கூட்டணிக்கு பெயர் சூட்டின. இந்நிலையில் “இந்தியா” பெயர் சுருக்கத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு வெள்ளி யன்று விசாரித்தது. அப்போது, “விளம்பர நோக்கத்துக்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரி கிறது” என நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார். மேலும் இதுபோன்ற விஷயங்க ளுக்காக “மக்கள் நேரத்தை வீணடிப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் இந்திய தேர்தல் ஆணை யத்தில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகா ரத்தில் தலையிட முடியாது” என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து மனுவை வாபஸ் பெற விரும்புவதாக மனுதாரர் தெரி விக்கவே, அதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகள் “இந்தியா” கூட்டணி பெயர் தொடர்பாக தில்லி உயர்நீதி மன்றத்தி லும் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அக்டோபர் 31 அன்று விசாரணைக்கு வருகின்றன.
கள்ளிமந்தையத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படாது
திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு
திண்டுக்கல்,ஆக.11- திண்டுக்கல் மாவட்டத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் தொழிற் பூங்கா அமைப்ப தற்கு 2013-ஆம் ஆண்டு அரசு ஆணை வெளி யிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கள்ளமந்தையம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைத்திட தகுதியான நிலம் ஒதுக்கீடு செய்து தருமாறு, சிப்காட் நிறுவனத்தால் கோரப்பட்டது. ஆனால், சிப்காட் நிறுவ னம் கோரியவாறு தொழிற்பூங்கா அமைக்க தகுதிவாய்ந்த நிலங்கள் இல்லாத கார ணத்தினாலும், இதுகுறித்து பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தங்களது அச்சத்தை தெரிவித்து விவ சாயிகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், எனவே கள்ளிமந்தையம் பகுதி யில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டாம் என்று தெரிவித்த கோரிக்கையினை கருத்தில் கொண்டும், திண்டுக்கல் மாவட் டம், ஒட்டன்சத்திரம் வட்டம் . கள்ளிமந்தை யம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படாது என அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக எவ்வித ஆதாரமு மின்றி பரப்பப்படும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரி வித்துள்ளார்.
தாடிக்கொம்பு பகுதியில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தக் கூடாது
அடிமனை - குத்தகை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
திண்டுக்கல், ஆக.11- தாடிக்கொம்பு திருமஞ்சண வீதியில் குடியி ருப்பவர்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயி கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இச்சங்கத்தின் மாவட்டச்செய லாளர் ஆர்.தயாளன், இந்துசமய அறநிலை யத்துறை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கு கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது. திண்டுக்கல் மேற்கு வட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி திருமஞ்சண வீதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் சொந்தமாக வீடு கட்டி, குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார்கள். மேற்படி மக்கள் அன்றாட கூலிக்காரர்கள். எனவே திருமஞ்சண வீதியில் வசிக்கும் மக்கள் வீடு கட்டியிருக்கும் இடம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோ விலுக்குச் சொந்தமானது என்றும், அறநிலை யத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்று கூறி கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக குடி யிருக்கும் மக்களை காலி செய்ய வலியுறுத்தி அறநிலையத்துறை சார்பாக அனைத்து வீடு களுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். மேற்படி நோட்டீஸ் கொடுக்கப் பட்ட சர்வே எண்;.. 1755ல் எங்கள் சங்கத்திலி ருக்கும் பொதுமக்கள் யாரும் குடியிருக்கவில்லை என்றும் அவர்கள் சர்வே எண்.1757லிலும் 1756லும் மட்டுமே வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். சர்வே எண்கள் 1757 மற்றும் 1756 ஆகிய சர்வே எண்கள் கிராமக் கணக்குப்படி வருவாய்த்துறை க்கு சொந்தமான இடங்கள் என்று தெரிகிறது. எனவே, திருமஞ்சண வீதியில் குடியிருக்கும் மக்கள் வசிக்கும் பகுதியை முழுமையாக ஆய்வு செய்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் தானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, ஒரு வேளை அறநிலையத்துறைக்கு சொந்த மான இடமாக இருந்தால் அம்மக்களின் ஏழ்மை நிலை கருதி அவர்களிடம் குறைந்த பட்ச தொகையை பகுதியாக (வாடகை) நிர்ணயித்து அவர்களை அப்புறப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். தொடர்ந்து அம்மக்கள் அதே இடத்தில் வசிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல் கோட்டாட்சியர், மேற்கு வட்டாட்சியர் ஆகியோருக்கும் மனு கொடுத்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் என்.பெரு மாள், தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத்தலை வர் தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்செயலாளர் சரத்குமார், ஆகியோர் உடனிருந்தனர்.
மன்னர் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்ப பயிற்சி
தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மதுரை,ஆக.11- மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் (சுயநிதி பிரிவு) மின்னணுவியல் -தகவல் தொடர்பியல் துறை, ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாணவர்களுக்கு ஆட் டோமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்க ளுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக் கப்படும். இதன் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் துறை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலாளர் எம்.விஜயராகவன், கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் ச.பிரபு, துறைத்தலைவர் , பேராசிரி யர்கள் மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்தின் கிளை இயக்குநர் கே.கார்த்தி, கிளை மேலாளர் கே.சரவணன் ஆகியோர் முன்னி லையில் கையொப்பமிடப்பட்டது.
மதுரையில் இன்று சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
மதுரை, ஆக. 11- சாலையோர வியாபாரிகளுக்கான பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா (PM - SVANidhi) கடனுதவி சிறப்பு முகாம் மதுரை மாநகராட்சியுடன் பாரத ஸ்டேட் வங்கியு டன் இணைந்து ஆகஸ்ட் 12 அன்று நடைபெறுகிறது. அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM PMSVANidhi) திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்க சிறப்பு முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி - அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகம், தல்லாகுளம், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகம், சி.எம்.ஆர்.ரோடு, காமராஜர் சாலை, மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகம் திருப்பரங்குன்றம் (தியாகராசர் பொறியியல் கல்லூரி அருகில்) மேற்கண்ட இடங்களில் ஆகஸ்ட் 12 சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடனுதவி முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் சாலை யோர வியாபாரிகளுக்கான வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதார் உடன் இணைப்பு செய்யப்பட்ட கைப்பேசி (Cellphone) உடன் மற்றும் தங்களின் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை களை முகாமிற்கு கொண்டு வருமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பழனி நகராட்சி இரவுக்காவலரை தாக்கியவரை உடனே கைது செய்திடுக!
சிஐடியு வலியுறுத்தல்
திண்டுக்கல், ஆக.11- பழனியில் சிஐடியு நிர்வா கியான இரவுக்காவலர் மீது தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சிஐடியு மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பழனி நகராட்சியில் இரவுக் காவல ராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சம்மேளனத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வா கியாக செயலாற்றி வருகி றார். கடந்த திங்களன்று பணியில் இருந்த போது இரவில் நகராட்சி அலுவல கத்திற்கு வந்த சாகுல் ஹமீது என்பவர் போதை யில் வாகனத்துடன் வந்து நகராட்சி கேட்டில் மோதிய போது தட்டிக்கேட்ட மாரி யப்பனை தகாதபடி பேசி யும், அவரது நெஞ்சில் குத்தி யும் உள்ளார். கொன்றுவிடு வேன் என்று மிரட்டியுள்ளார். மாரியப்பன் காயமடைந்த நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மாரியப்பன் காவல்நிலையத்தில் புகா ரும் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சாகுல் ஹமீதுவை கைது செய்ய வேண்டும் இவ்வாறு அதில் வலி யுறுத்தியுள்ளார்.