மதுரை, ஜூன் 11- உலகளவிலான குழந் தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புதினம் ஜூலை 12-ஆம் தேதி கடைப்பிடிக் கப்பட்டது. அதனொரு பகுதி யாக சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் பெரியகருப்பன், ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகி யோர் தலைமையில் குழந் தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதியேற்பு நிகழ்வு நடை பெற்றது. தேனியில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதி ரான விழிப்புணர்வு கையெ ழுத்து இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தொடங்கி வைத் தார். திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் தங் கம் ரவி கண்ணன் தலைமை யில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் பொறியாளர் தங்கபாண்டி யன், மேலாளர் பாபு சுகா தார அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண் டனர். திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் வட்டாட்சியர் ரெங்க சாமி தலைமையில் அலுவ லர்கள் மற்றும் ஊழியர்கள் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.