தேனி மாவட்டம், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற சுமார் 1442 வீரர்- வீராங்கனைகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ரூ.41.58 இலட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையினையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி, பாராட்டினார். சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.