சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு (1928) பிரிட்டிஷ் அரசு மதுரை மாநகரத்திலிருந்து இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூருக்கு இரயில்வே சேவையை துவக்கியது. தேனி மாவட்டத்தின் பிரதானமான பணப் பயிர்களான ஏலக்காய், மிளகு, இலவம்பஞ்சு, தேயிலை, காபி போன்ற பொருட்க ளை பிரிட்டிஷ் காரர்களுடைய தேவைக்காகவும், அன்றைய அரசு நிர்வாகத்தினுடைய உயர் அதிகாரிகளுக்காகவும் அத்தோடு ஓரளவு பயணிகளுக்கும், தபால் போக்குவரத்திற்காகவும் இந்த சேவையை துவக்கினார்கள். அன்றைய சூழ்நிலையில் போக்குவரத்திற்காக மக்கள் பயன் படுத்துவது குறைவாக இருந்தது. இடைக்காலத்தில் போக்குவரத்து களில் ஏற்பட்ட மாற்றங்களும், சரக்கு போக்குவரத்துகளில் லாரி களையும், வேன்களையும் பயன்படுத்தி உடனுக்குடன் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் வந்தபோது, தனியார் வியாபாரிகள் இதை அதிகமாக பயன்படுத்தினார்கள். பேருந்து போக்குவரத்து கட்டணங்கள் அன்று மிகக் குறைவாக இருந்ததினால் பொதுமக்கள் பயணத்திற்கு ரயிலை பயன்படுத்துவது குறைவாக இருந்தது. இந்த சுமார் நூறாண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
தேனி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத்துறைகள் உரு வாக்கப்பட்டன. தமிழகத்தில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தேக்கடி அணை, சுருளி அருவி, வைகை அணை, மங்கள தேவி கோட்டம் என்கிற கண்ணகி கோவில், கும்பக்கரை அருவி, தேனி எல்லை யில் உள்ள கொடைக்கானல், மேகமலை, பச்சை கூமாட்சி, மலை தேயிலைத் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள அணைகள், சோத்துப் பாறை அணை போன்றவை சுற்றுலாவுக்கான பகுதிகளாகும். அத்துடன் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருடம் தோறும் தேனி, கம்பம், கூடலூர் வழியாக கேரளாவின் சபரிமலைக்கு சென்று வரக்கூடிய விரிந்த போக்குவரத்துகளும் இந்த காலத்தில் பல மடங்கு அதிகரித்தது. இதனால், மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வந்து போகக் கூடிய தேனி மாவட்டமாக மாறியது. இதே காலத்தில் தேங்காய், வாழை, திராட்சை உற்பத்தி பல மடங்கு அதிகரித்ததன் விளை வாக, ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான டன்கள் ஏற்றுமதி ஆகிவருகிறது. இவைகளுக்கான இடுபொருட்களின் தேவைகளும் பல்லாயிரம் டன்கள் இறக்குமதி ஆகிறது. இப்படி பல்வேறு வகைகளில் தேனி மாவட்டமும், அதனுடைய சுற்றுலாத்துறையும் அதனுடைய பொருளா தாரக் கட்டமைப்பும், விவசாய உற்பத்திகளும், மேம்பட்டு வந்திருக்கும் காலம் இது.
இந்த சூழ்நிலையில், 2010இல் ஒன்றிய அரசு இங்கே இயங்கிக் கொண்டிருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகற்றிவிட்டு, இந்த தேவைகளை ஈடுகட்டுவதற்கான போக்குவரத்தை பலப்படுத்துவ தற்காக அகல ரயில் பாதை அமைப்பதென முடிவு செய்தது. பிரதமர் மன்மோகன்சிங் அரசு 2010 ஆம் ஆண்டிலே மீட்டர்கேஜ் தண்டவாளங்களை அகற்றியது. ரயில் போக்குவரத்து நின்றது. 2015க்குள் அகலப் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றி, ரயிலை இயக்குவோம் என்று ஒன்றிய அரசும், ரயில்வே துறையும் அறி வித்தன. தண்டவாளங்களை அகற்றி 2 ஆண்டுகளுக்கு பிறகும் புதிய திட்டத்திற்கான எந்த பணிகளும் துவங்கவே இல்லை. பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான், தேனி மாவட்ட மக்கள், வந்து கொண்டிருந்த ரயிலையும் நிறுத்திவிட்டு புதிய ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகளும் துவக்கப்படவில்லை என்பதால் மக்கள் ஏமாற்றத்துக்குள்ளானார்கள். பல்வேறு அரசியல் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளான சில நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இரயில்வே துறையில் இதுபற்றி விபரங்கள் கேட்டபோது, இந்த திட்டம் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அபிப்ரா யங்கள் இருக்கிறது. இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.300 கோடிக்கு மேல் (அன்றைய சூழ்நிலையில்) தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் இந்த தொகையை ஈடுகட்டுவதற்கான எந்த வருமானமும் இல்லை. எனவே இது விரயம், நஷ்டம், அதனால் இந்த திட்டம் தேவையில்லை என்று ரயில்வே துறை முடிவுக்கு வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். அதனால் தேனி மாவட்ட மக்கள் பதட்டம் அடைந்தார்கள். அப்போதிருந்த பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டதற்கு அவர்கள் அளித்த பதில், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. இதன் விளைவாக மக்கள் ஒரு போராட்ட குழுவை ஏற்படுத்தி அதன் மூலமாக ஒன்றிய அரசிடம் தங்களுடைய உரிமையை கோருவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
அரசியல் பாகுபாடில்லாமல், அனைத்துத் தரப்பு வர்த்தகர்களும், விவசாயிகளும், கல்வியாளர்களும் ஒன்றுகூடி பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்து, தேனியில் 2012 ஆம் ஆண்டு ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி அதில் சில தீர்மா னங்களை நிறைவேற்றினார்கள். போடி - மதுரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு உடடினயாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டுமெனவும், ஏற்கனவே நீண்ட காலமாக ஆய்வில் உள்ள திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை, பெரியகுளம், தேனி, போடி, லோயர்கேம்ப் வழியாக ஒரு அகல ரயில் பாதை திட்டத்தை அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்றைக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.லாசர் (சிபிஐஎம்) தலைவராகவும், கே.டி.கே.தங்கமணியின் சகோ தரரும், வர்த்தக சங்கப் பிரமுகருமான கே.டி.கே.போஸ்மணி செயலா ளரகாவும், தேனி வர்த்தக சங்க தலைவர் கே.எஸ்.கே.நடேசன் பொருளாளராகவும் கொண்ட ஒரு போராட்டக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில் தேனி வர்த்தக சங்கத்தின் மரியாதைக்குரிய ஆனாகடை எஸ்.கே.பாலன், எவரெஸ்ட் ஹோட்டல் உரிமையாளர் பி.சி.ராஜேந்திரன் (தற்போதைய கமிட்டி தலைவர் இவரே), வர்த்தக சங்க தலைவர் சீனிவாசன், ஓட்டல் சங்க நிர்வாகியான சின்னமனூர் பெருமாள், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ராம மூர்த்தி, போடி ஏலக்காய் வர்த்தக சங்க மாவட்டப் பொறுப்பாளர் சம்பத், போடி சிறுவியாபாரிகள் சங்க தலைவர் தனசேகரன், போடி வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வேல்முருகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கர்சுப்பு, வாலிபர் சங்க நிர்வாகி முனீஸ்வரன், பெரியகுளம் வர்த்தக சங்கத் தலைவர் விஜயகுமார், வழக்கறிஞர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர்.இது போடி-மதுரை அகல ரயில் பாதை சேவையின் தேவைகளை கணக்கீடு செய்தது. மாவட்டம் முழுவதும் விபரங்களை சேகரிப்பதற்காக கல்வி யாளர்களை, விவசாய சங்க பிரதிநிதிகளை, வர்த்தக சங்க பிர முகர்களை அனுப்பி ஆய்வு செய்தது.
இது பயணிகள் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய முன் னேற்றத்தில்லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சேர்வதினாலும், சுற்றுலாத்துறையின் மேம்பாட்டினாலும் வருடத்திற்கு பல்லாயி ரக்கணக்கானோர் பேர் வந்து செல்லக்கூடிய வருவாய்க்கான ஏற் பாடும், விவசாய உற்பத்தியின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ஏற்று மதி, இறக்குமதி சரக்கு வண்டிகளை கொண்டு செல்வதினால் பல லட்சக்கணக்கான ரூபாய் மாதாந்திர வருமானம் கிடைக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்தது. இந்த விபரங்களை உள்ளடக்கிய மனுக்களை தயார் செய்து, இது நஷ்டத்தில் இயங்கக்கூடிய திட்டம் இல்லை என்று ஆய்வறிக்கையின் மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் அரசு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ரயில் இல்லாத மாவட்டமாக தேனியை மாற்றி விடக்கூடாது என்ற மக்களின் ஆதங்கத்தையும் அந்த மனுக்களில் குறிப்பிட்டு பிரதமருக்கும், ரயில்வே துறை அமைச்சருக்கும், தமிழகத்தை சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராட்டக்குழுவின் சார்பாக மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கு பின்பு தேனி மாவட்ட மக்களிடம் விரிவான பிரச்சாரம், தேனி யை மையமாக கொண்டு தர்ணா போராட்டம், ஆர்ப்பாட்டம், தேனி நகரத்தில் வர்த்தகர்கள் கடையடைப்பு போன்ற பல போராட்டங்களை யும் கடந்த பத்தாண்டு காலமாக போராட்டக்குழு நடத்தி வருகிறது. இதன் பின்பு, இந்த போராட்டக்குழுவின் சார்பில் 2012இல் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங், ரயில்வே துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து, இந்த போராட்டக்குழு நேரடியாக மனுக்களை சமர்ப்பித்தது. இத்தகைய தொடர் நடவடிக்கைகளுக்கு பின்புதான் ஒன்றிய அரசும், ரயில்வே துறையும் இதற்கான நிதி ஒதுக்கீடுகளை துவக்கின. பட்ஜெட்டில் நிதியை சிறுகச்சிறுக ஒதுக்கீடு செய்தன. இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு அமல்படுத்த துவங்கின. இதற்காக 12 வருடம் மக்கள் காத்திருந்தனர். தொடர்ந்து போராடியும் வந்தனர்.
போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததனால் பணிகள் மிக மெது வாக நடந்தன. அவர்கள் சொன்ன 2015க்குள் அந்த பணிகளை முடிக்கின்ற விதத்தில் நிதி ஒதுக்கீடும் இல்லை, பணியின் வேகமும் இல்லை. அதனால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பின்புதான் கூடுதலான நிதி ஒதுக்கீடும், பணிகளை வேகமாக முடுக்கி விடுகின்ற வேலைகளும் நடைபெற்றன. 2020லேயே போடி வரை ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார்கள். அப்பொழுதும் அந்த பணிகள் முடியவில்லை. இப்பொழுது தொடர் முயற்சிகள் காரணமாக தற்போது வருகிற மே 26 ஆம் தேதி அன்று ரயில் இயக்கப்படும், அதை பிரதமர் காணொலிக் காட்சியின் மூலம் சென்னையில் இருந்து இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தேனி மாவட்ட மக்கள் 12 ஆண்டு காலமாக கட்சி பேதமின்றி, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து போராடியதன் விளைவு தான், ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு உயிர் கொடுத்து அது இன்றைக்கு இயங்க ஆரம்பித்துள்ளது. இப்பொழு தும் தேனியிலிருந்து போடி வரையான பணிகள் முடிவடையாமல் இருக்கிறது. அதனால் தேனி வரையே இந்த ரயில் இயக்கப்படும் என்றே தகவல் கூறுகிறது. சென்னையை நோக்கி செல்லும் மாண வர்களுக்கு, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, வர்த்தகர்களுக்கு என அனைவருக்கும் இது நன்மையை ஏற்படுத்தும். இது மக்களின் ஒன்றுபட்ட தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 10 மாதம் தன் குழந்தையை வயிற்றில் சுமந்து கஷ்டப்பட்டு பிரசவித்த தாய், குழந்தையின் முகத்தைப் பார்க்கும் பொழுது தனது துயரங்களை மறந்து மகிழ்ச்சி அடைகிற நிலையில் இன்றைய தேனி மாவட்டத்து மக்கள் உள்ளனர்.