இராமநாதபுரம்,நவ.24- இராமநாதபுரம் மாவட் டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே முகிழ்தகம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் கடந்த 13- 7-2019 ஆண் டில் சாதி ஆணவ படு கொலை செய்யப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் போராட்டத்தால் கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர். அதைத்தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் கொலை யாளிகள் தலைமறைவாக உள்ளனர். எனவே காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தொண்டி பேருந்து நிலையம் அருகே வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் என்.கலையர சன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணகி, சிபிஎம் தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சேதுராமு, ஏ. நாகநாதன், விசிக ராதா கிருஷ்ணன் மற்றும் முகிழ் தகம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் ,சேகர் அஜித் குமார் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் துவங்கவிருந்தது.அப் போது திருவாடானை காவல்துறை டிஎஸ்பி மற் றும் அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அதில், டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் விரைந்து நட வடிக்கை எடுத்து குற்றவாளி களை கைது செய்யவும் நீதிமன்ற மூலம் அஜீத்குமா ரின் குடும்பத்தினரிடம் அவ ருடைய உடமைகளை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். காவல்துறை டிஎஸ்பி உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் தள்ளி வைக் கப்பட்டது என்று மாவட்டச் செயலாளர் என். கலையர சன் தெரிவித்தார்.