மதுரை, மார்ச் 18- ரயில்வேயில் இளைஞர் களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் முன்னாள் ராணுவத்தி னரை கேட் கீப்பர்களாக பணி அமர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து ரயில்வே கேட்களிலும் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அனைத்து ஸ்பெஷல் கிளாஷ் கேட்களுக்கு 8 மணி நேரம் பணி வழங்க வேண் டும் என்று வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் ( டிஆர்இயு), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ரயில்வே காலனி அரு கில் உள்ள கோட்டபொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உதவி கோட்ட தலைவர் பா. வினோத்பாபு தலைமை வகித்தார். கோட்ட இணைச் செயலாளர் ரா.சங்கர நாராயணன், முன்னாள் கோட்ட தலைவர் மா.சிவகுமார், ஏஎல்ஆர் எஸ்ஏ முன்னாள் கோட்ட செயலா ளர் ரா.கல்யாணசுந்தரம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வா, தலைவர் அ. பாவெல் சிந்தன் ஆகியோர் பேசினர் சிவகங்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரயில்வே நிலை யம் முன்பு டிஆர்இயு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில் தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகி வீரமணி, மதுரை கோட்ட உதவி செயலாளர் ஆகியோர் பேசினர்.