இராஜபாளையம், ஜன.2- இராஜபாளையம் டி.பி. மில் சாலை யில் தாமிரபரணி கூட்டுக் குடிநீருக் காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் டி.பி. மில் சாலையில் தாமிர பரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும்பணி நடைபெற்று வருகிறது. இராஜபாளையம் சஞ்சீவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொன் இருளப்பன் (32) துணிக்கடை ஒன்றில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது தாமிர பரணி கூட்டுக் குடிநீருக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார். இராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.