districts

img

தமிழகத்தின் தென் முனையில் களமிறங்கும் இளம் கம்யூனிஸ்ட்

நாகர்கோவில், பிப். 14 கொல்லங்கோடு நக ராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிடும் 33 வார்டுகளில் 31 ஆவது வார்டில் எம்பிஏ முடிந்துள்ள இளம் பெண்  களம் காண்கிறார். எம்பிஏ முடித்துள்ள மித்ரா  வாலிபர் சங்கத்தின் வட்டார குழு உறுப்பினரும் ஆவார் 24 வயதான மித்ரா பாஜக, காங் உள்ளிட்ட 4 முக்கிய கட்சிகளை எதிர்த்து நிற்கிறார். இந்த வார்டில் மொத்த வாக்காளர்கள் 1833. எழுத்தறிவில் முதலிடம் பிடித்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங் கோடு நகராட்சி தான் முத லிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது செய்தியாளரிடம் பேசிய மித்ரா கல்லூரி மாணவ மாணவிகளை சந்தி்த்து வாக்கு சேகரித்து வரு வதாகவும் நகராட்சியில் அதிகம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழி காட்டுதலோடு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். குறிப்பாக கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் அரசு கலைக்கல்லூரி துவங்க வேண்டும் ,சட்ட கல்லூரி துவங்க வேண்டும் என்பது எனது விருப்பமும் கூட. கட்சியின் வழிகாட்டுத லோடு இந்த இரு கோரிக்கை யையும் ஐந்தாண்டு காலங்களில் நிறைவேற்ற முயற்சிப்பேன் என்றார்.