மதுரை, ஏப்.1- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசன் திங்களன்று காலை வில்லாபுரம் அண்ணா சிலை அருகில் இருந்து திமுக மாவட்ட செயலாளர் வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ.தளபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.வேலுச்சாமி, மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பூமி நாதன், விசிக வடக்கு மாவட்டச் செயலா ளர் சுடர் மொழி, மக்கள் நீதி மய்யம் மதுரை மண்டலச் செயலாளர் அழகர் ஆகி யோர் தலைமையில் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார்.
தெற்கு தொகுதிக்குட்பட்ட வார்டு 86, கிழக்குத்தெரு, மணிகண்டன் நகர், கீரைத்துறை, வார்டு 45 என்எம்ஆர் சாலை, சின்னக்கண்மாய், கீழ்மதுரை காலனி, காமராஜபுரம். வார்டு 44 சிஎம் ஆர் ரோடு, பாலரெங்கபுரம், வார்டு 40 இந்திரா நகர், பழைய கீழ்மதுரை ஸ்டே ஷன் ரோடு, சவேரியார் சாவடி, கிருஷ்ணா புரம் சந்து வழியாக பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டு லெட்சுமிபுரம் மெயின் ரோட்டில் நிறைவடைந்தது. இதில், திமுக மாவட்டப் பொருளாளர் ஈ.முருகவேல், பகுதி செயலாளர் போஸ் முத்தையா, ஆர்.முத்து, வட்டச் செயலா ளர்கள் தாமோதரன், ரமேஷ் பாபு, முத்துப்பாண்டி, மலைச்சாமி, கர்ணன், சடையாண்டி, முருகன், ராஜேந்திரன், மண்டலத் தலைவர் மா.முகேஷ்சர்மா, சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப் பினர்கள் ஏ.சையது அபுதாகீர், விஜய லட்சுமி பாண்டியன், ஏ.அருண்குமார் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், கற்பகம். திருச்செல்வம், மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் அ.ரமேஷ், பகுதிக் குழு செயலாளர் ஜெ.லெனின், சுமைப் பணி தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் அருண்குமார், ஆட்டோ தொழி லாளர் சங்க மாநில பொதுச் செயலா ளர் சிவாஜி, திராவிட கழகம், தமிழ் புலி கள் கட்சி மாவட்ட, மூவேந்தர் முன்னேற் றக் கழகம், வல்லரசு ஃபார்வர்டு பிளாக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் கூட்டணி தலைவர் கள் பேசுகையில், ‘‘மதுரை நாடாளு மன்ற உறுப்பினராக சு.வெங்கடேசன், மதுரை மாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்துள்ளார். அதேபோல் ஒன்றிய அரசு திட்டங்களை மதுரை யில் செயல்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட வார்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார். மாணவர்களுக்கு கல்வி சார்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உடனடியாக குரல் கொடுத்து வருகிறார். மேலும் மாணவர்கள் கல்வி சம்பந்தமான பிரச்சனைகளை உடனடி யாக தலையிட்டு அவற்றை சரி செய்வதற் கான நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகிறார்.
இவர் போன்றோர் நாடாளுமன்றத்திற்கு சென்றால் தொ டர்ந்து மக்கள் அடிப்படை பிரச்சனைக ளுக்கான கேள்விகள் எழுப்பப்படும். இன்றைக்கும் சுங்குடி சேலைக் கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வ தற்கு தொடர்ந்து போராடி அதை நிறுத்தி வைத்துள்ளார். சிறு உற்பத்திகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரு பவர். மதுரை ஒரு பண்பாட்டு நகரமாக இருந்து வருவதை அதை பாதுகாத்தி டவும் மேம்படுத்திடவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறார்” என்றனர்.