districts

img

பென்சன் பாதுகாப்புக்காக ஒன்றுபட்ட இயக்கம் தேவை

திண்டுக்கல், மார்ச் 30- பென்சன் பாதுகாப்புக்காக ஒன்றுபட்ட இயக்கம் தேவைப்படு கிறது என்று தென்மண்டல காப் பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க. சுவாமிநாதன் கூறினார்.  எல்.ஐ.சி.யில் பணியாற்றி ஓய்வு  பெறும் தோழர் எஸ்.ஏ.டி.வனிதா வின் பணி நிறைவு பாராட்டு விழா  திண்டுக்கல்லில் புதனன்று நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட க. சுவாமிநாதன் பேசுகையில், தோழர் வனிதாவின் சங்க பணி வெளியில் இருப்பவர்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. காதல் திருமணம் செய்து கொண்ட பலருக்கு அடைக்  கலம் கொடுத்தவர் மூத்த தொழிற்  சங்கத்தலைவர் எஸ்.ஏ.தங்க ராஜன். அவரது மகள் வனிதா. முது பெரும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் பி.டி.ரணதிவே. ஒரு முறை தமிழ்நாட்டிற்கு வந்த போது நமது தோழர்கள் நடத்திய மாநாட் டிற்கு அவரை பேச அழைத்தனர். உங்கள் மாநாட்டில் எத்தனை பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள் என்று ரணதிவே கேட்டார். 800 பேர்  கலந்து கொள்வார்கள் என்று நமது தலைவர்கள் தெரிவித்தனர்.  அதில் எத்தனை பெண் பிரதிநிதி கள் என்று அடுத்த கேள்வியை ரண திவே கேட்டார். நமது தலைவர்களி டம் பதில் இல்லை. சரி உங்கள் மாநாடு எத்தனை நாள் நடைபெறும்  என்று கேட்டார். இன்றும் நாளை யும் 2 நாட்கள் நடைபெறும் என்று தலைவர்கள் பதில் உரைத்தனர். சரி நாளை நான் மாநாட்டிற்கு வரு கிறேன். அந்த மாநாட்டிற்கு குறைந்  தது 100 பெண்கள் வரவேண்டும் என்று சொன்னார். அடுத்த நாள்  நமது தோழர்கள் 100 பெண்களை  மாநாட்டில் பங்கேற்க செய்தனர்.  அதன் பிறகு பி.டி.ரணதிவே  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். உலக அளவில் ஆணாதிக்க தாக்கத்திற்கு யாரும் விதிவிலக் கல்ல. தொழிற்சங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்று பி.டி.ஆர்.  அந்த மாநாட்டில் ஒரு மனம் திறந்த  உரையாடலை நிகழ்த்தினார். 

திண்டுக்கல், மார்ச் 30- பென்சன் பாதுகாப்புக்காக ஒன்றுபட்ட இயக்கம் தேவைப்படு கிறது என்று தென்மண்டல காப் பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க. சுவாமிநாதன் கூறினார்.  எல்.ஐ.சி.யில் பணியாற்றி ஓய்வு  பெறும் தோழர் எஸ்.ஏ.டி.வனிதா வின் பணி நிறைவு பாராட்டு விழா  திண்டுக்கல்லில் புதனன்று நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட க. சுவாமிநாதன் பேசுகையில், தோழர் வனிதாவின் சங்க பணி வெளியில் இருப்பவர்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. காதல் திருமணம் செய்து கொண்ட பலருக்கு அடைக்  கலம் கொடுத்தவர் மூத்த தொழிற்  சங்கத்தலைவர் எஸ்.ஏ.தங்க ராஜன். அவரது மகள் வனிதா. முது பெரும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் பி.டி.ரணதிவே. ஒரு முறை தமிழ்நாட்டிற்கு வந்த போது நமது தோழர்கள் நடத்திய மாநாட் டிற்கு அவரை பேச அழைத்தனர். உங்கள் மாநாட்டில் எத்தனை பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள் என்று ரணதிவே கேட்டார். 800 பேர்  கலந்து கொள்வார்கள் என்று நமது தலைவர்கள் தெரிவித்தனர்.  அதில் எத்தனை பெண் பிரதிநிதி கள் என்று அடுத்த கேள்வியை ரண திவே கேட்டார். நமது தலைவர்களி டம் பதில் இல்லை. சரி உங்கள் மாநாடு எத்தனை நாள் நடைபெறும்  என்று கேட்டார். இன்றும் நாளை யும் 2 நாட்கள் நடைபெறும் என்று தலைவர்கள் பதில் உரைத்தனர். சரி நாளை நான் மாநாட்டிற்கு வரு கிறேன். அந்த மாநாட்டிற்கு குறைந்  தது 100 பெண்கள் வரவேண்டும் என்று சொன்னார். அடுத்த நாள்  நமது தோழர்கள் 100 பெண்களை  மாநாட்டில் பங்கேற்க செய்தனர்.  அதன் பிறகு பி.டி.ரணதிவே  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். உலக அளவில் ஆணாதிக்க தாக்கத்திற்கு யாரும் விதிவிலக் கல்ல. தொழிற்சங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்று பி.டி.ஆர்.  அந்த மாநாட்டில் ஒரு மனம் திறந்த  உரையாடலை நிகழ்த்தினார்.